×

சனாதனம் தொடர்பான வழக்கில் அமைச்சர் உதயநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் திருத்தப்பட்ட மனு தாக்கல்..!!

டெல்லி: சனாதனம் தொடர்பான வழக்கில் அமைச்சர் உதயநிதி சார்பில் திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது. புதிதாக வழக்கில் இணைந்தவர்களும் திருத்தப்பட்ட மனு மீது பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சனாதனம் குறித்து பல்வேறு மாநிலங்களில் தொடுத்த வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்கக் கோரி உதயநிதி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் சில மாற்றங்களை செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்திய நிலையில் உதயநிதி புதிய மனு தாக்கல் செய்திருக்கிறார்.

The post சனாதனம் தொடர்பான வழக்கில் அமைச்சர் உதயநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் திருத்தப்பட்ட மனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Minister ,Udayanidhi ,Sanadhanam ,Delhi ,Sanadanam ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்...